கரோனா வைரஸ் நெருக்கடியினால் உலக மக்கள் தொகையில் 6 கோடி பேர் கடுமையான, தீவிர வறுமைக்குத் தள்ளப்படும் அபாயம் இருப்பதாக உலகவங்கி தலைவர் டேவிட் மல்பாஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளில் உலகப் பொருளாதாரம் எட்டிய சாதனைகளையெல்லாம் கரோனா அழித்து விடும் என்கிறார் அவர்.
இது தொடர்பாக உலகவங்கித் தலைவர் டேவிட் மல்பாஸ் கூறியதாவது:
அடுத்த 15 மாதங்களில் 160 பில்லியன் டாலர்கள் செலவிடும் நோக்குடன் உலக வங்கி 100 நாடுகளுக்கு ஏற்கெனவே உதவி புரிந்து வருகிறது.
இந்த 100 நாடுகளில்தான் உலகின் 70% மக்கள் வசித்து வருகின்றனர். உலகப்பொருளாதாரம் 5% சரிவு கண்டால் அது உலகின் ஏழை நாடுகள் மீது சொல்லொணா தாக்கம் செலுத்தும்.
கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொண்ட வறுமை ஒழிப்பு முயற்சிகளையெல்லாம், சாதனைகளெல்லாம் அழித்தொழிக்கும் விதமாக கரோனாவினால் ஏற்படும் பொருளாதார சரிவினால் சுமார் 6 கோடிக்கும் அதிகமான மக்கள் கடுமையான பசி, பட்டினி, வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று கணித்துள்ளோம்.
ஏழைநாடுகளின் சிதைந்த சுகாதார அமைப்புகளை மீட்க உலக வங்கி இதுவரை 5.5 பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது. எனவே வளர்ந்த நாடுகள் இப்போதும் முன்வர வேண்டும் அப்போதுதான் 6 கோடி மக்களை தீவிர வறுமையிலிருந்து மீட்க முடியும்.
இவ்வாறு கூறினர் உலகவங்கியின் தலைவர்.
முக்கிய செய்திகள்
சினிமா
5 mins ago
சினிமா
8 mins ago
வலைஞர் பக்கம்
12 mins ago
சினிமா
17 mins ago
சினிமா
22 mins ago
இந்தியா
30 mins ago
க்ரைம்
27 mins ago
இந்தியா
33 mins ago
தமிழகம்
55 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago