இது ஒற்றுமைக்கான நேரம்: அமெரிக்காவின் மிரட்டல்களுக்கிடையே உலக சுகாதார அமைப்புக்கு ஐரோப்பிய யூனியன் ஆதரவு

By செய்திப்பிரிவு

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மிரட்டல்களுக்கிடையே உலக சுகாதார அமைப்புக்கு ஐரோப்பிய யூனியன் ஆதரவு தெரிவித்துள்ளது.

கரோனா விவகாரத்தில் உலக சுகாதார அமைப்புக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்தார்.

அதில், “அடுத்த 30 நாட்களுக்குள் கரோனா வைரஸ் தொடர்பாக அடுத்தகட்ட மேம்பாடுகளுக்கான நடவடிக்கையை உலக சுகாதார அமைப்பு எடுக்கவில்லை என்றால் தற்காலிகமாக நிறுத்திய நிதியை நிரந்தரமாக நிறுத்த நேரிடும். மேலும் அந்த அமைப்பில் எங்கள் இருப்பையும் மறுபரிசீலனை செய்வோம்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் உலக சுகாதார அமைப்புக்கு ஐரோப்பிய யூனியன் ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐரோப்பிய யூனியன் தரப்பில், “இது ஒற்றுமைக்கான நேரம். குற்றத்தைச் சுட்டிக்காட்டி பல தரப்பு ஒற்றுமையைக் குறைப்பதற்கான நேரம் அல்ல. கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக உலக சுகாதார அமைப்பு எடுக்கும் முயற்சிகளை நாங்கள் ஆதரிக்கிறோம். மேலும் அவர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு முன்னரே நிதி அளித்திருக்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்காதான் அதிகமாக நிதியுதவி அளிக்கிறது. கிட்டத்தட்ட 500 மில்லியன் டாலர் வரை அமெரிக்கா நிதி உதவி செய்கிறது. சீனாவோ வெறும் 38 மில்லியன் டாலர்தான் வழங்குகிறது. ஆனாலும், அவ்வமைப்பு சீனாவுக்குச் சாதகமாகச் செயல்படுவதாகத் தெரிகிறது. அவ்வமைப்பு முறையாகச் செயல்பட்டிருந்தால், தற்போது உலக அளவில் ஏற்பட்டு இருக்கும் கரோனா பாதிப்பைத் தடுத்திருக்க முடியும். சீனாவின் ஊதுகுழலாக உலக சுகாதார அமைப்பு செயல்பட்டு வருகிறது என்று ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.

மேலும், உலக சுகாதார அமைப்புக்கு வழங்கப்பட்டு வந்த நிதியை நிறுத்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

29 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்