அமெரிக்காவில் இந்த வாரம் மட்டும் ஒரு கோடி பேருக்கு கரோனா தொற்றைக் கண்டறியும் மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்ள உள்ளதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ட்ரம்ப் கூறும்போது, ”நாங்கள் மூன்று வாரங்களுக்கு முன்னர்வரை ஒரு நாளைக்கு 1,50,000 பேருக்கு கரோனா தொற்றை உறுதி செய்வதற்கான பரிசோதனை செய்தோம். ஆனால் இவ்வாரம் ஒரு நாளைக்கு 3,00,000 பேருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்ய இருக்கிறோம். இந்த வார முடிவுக்குள் 1 கோடி பேருக்கு கரோனா மருத்துவப்
பரிசோதனை நடத்த உள்ளோம். இது மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இரு மடங்கு எண்ணிக்கையாகும்” என்று தெரிவித்துள்ளார்.
சீனாவிலிருந்து பரவிய வூஹான் வைரஸ் காரணமாக உலக வல்லரசான அமெரிக்கா கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது.
அமெரிக்காவில் மட்டும் 13,85,834 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 81,795 பேர் பலியாகி உள்ளனர். 2,62,225 பேர் குணமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் இதுவரை 96,19,855 பேருக்கு கரோனா தொற்றுக்கான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் கரோனா தொற்றுக்கு 42, 56,022 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 15, 27,517 பேர் குணமடைந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
20 mins ago
ஜோதிடம்
17 mins ago
ஜோதிடம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
உலகம்
3 hours ago