அமெரிக்காவில் கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்டிராத அளவுக்கு நோய்த் தொற்று பாதிப்பு: நேற்று ஒரே நாளில் கரோனாவுக்கு 2053 பேர் பலி

By செய்திப்பிரிவு

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,000க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவில் இயங்கும் ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவ பல்கலைகழகம் வெளியிட்ட அறிக்கையில் , “ அமெரிக்காவில் வியாழக்கிழமையன்று கரோனா தொற்றுக்கு 2,053 பேர் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் கரோனா தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 63,861 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10,95,210 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு பாதிப்பை அமெரிக்கா அடைந்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த 50 ஆண்டுகளில் நோய்த் தொற்றுகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் இதுவே அதிகமாகும் என்று அந் நாட்டின் நோய் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

உலக அளவில் கரோனா தொற்று இறப்பு விகிதத்தில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. ஏப்ரல் மாதத்தில் தினமும் சராசரியாக 2,000 பேர் மரணமடைந்துள்ளனர்.

அமெரிக்கா-வியட்நாம் இடையான போரில் இறந்த அமெரிக்கர்களை விட தற்போது கரோனாவால் இறந்த அமெரிக்கர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.

கரோனா வைரஸால் அமெரிக்கா கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

1 hour ago

மேலும்