கடுமையான ஊரடங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்குப் பிறகு ஸ்பெயினின் பெற்றோர்களுக்கு ஆறுதலான செய்தியை அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அதாவது குழந்தைகளை அழைத்து கொண்டு குறுகிய தூர நடைப் பயிற்சிக்கு அழைத்து செல்ல பெற்றோர்களுக்கு ஸ்பெயின் அரசு அனுமதி அளித்து உள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான் ஸ்பெயின் கரோனா வைரஸ் தொற்றால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. சுமார் 2 லட்சத்தும் அதிகமானவர்கள் ஸ்பெயினில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 21,717 பேர் பலியாகி உள்ளனர்.
கரோனா தொற்று இரண்டு மாதங்களுக்கு ஸ்பெயினில் அதிகமாக இருந்த நிலையில் மார்ச் மாதம் முதல் குழந்தைகளை வெளியே அழைத்து வருவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்திருந்தது.
இந்த நிலையில் ஸ்பெயினில் தற்போது கரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மேற்பார்வையின் கீழ் 14 வயதுக்குட்டப்பட்ட குழந்தைகளை அவர்களது பெற்றோர்கள் இனி குறைந்த தூர நடைப்பயிற்சிக்கு அழைத்து செல்ல ஸ்பெயின் அரசு அனுமதி அளித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
சினிமா
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
சினிமா
7 hours ago
இந்தியா
8 hours ago