நியூயார்க் நகரில் ஒரே நாளில் 731 பேர் பலி: தவிக்கும் அமெரிக்கா

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸால் நியூயார்க் நகரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டும் ஒரே நாளில் 731பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 190-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவை விடவும், இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, ஈரான், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது.

குறிப்பாக மிகவும் வளர்ந்த நாடான அமெரிக்கா கரோனாவின் கிடுக்கிப்பிடியில் சிக்கி திணறி வருகிறது. அங்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 10625 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 377,605 தாண்டியுள்ளது

அமெரிக்காவில் கரோனா வைரஸுக்கு நேற்று மட்டும் ஆயிரத்து 913 பேர் பலியாகியுள்ளனர், இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,784 ஆக அதிகரித்துள்ளது.

இதில் மிக மோசமாக நியூயார்க் நகரம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டும் ஒரே நாளில் 731பேர் உயிரிழந்துள்ளனர்.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

56 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

10 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்