பிரான்ஸில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிகை 9,000-ஐ நெருங்கிறது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் ஆலிவர் வேரன் கூறும்போது, “பிரான்ஸில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு 98,010 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,911 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். சுமார் 29,752 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 7,000 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். இந்த நோய்த்தொற்று முடிவதற்கு இன்னும் நீண்ட நாட்கள் உள்ளன. நாம் சமூக விலகலைத் தொடர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் சுமார் 13 லட்சத்து 47 ஆயிரத்து 235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 74 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.
அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான் ஆகிய நாடுகள் கரோனா வைரஸால் அதிகம் பாதிப்பைச் சந்தித்துள்ளன. இதில் ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் உயிரிழப்புகள் 11,000 -ஐக் கடந்துள்ளது.
அமெரிக்காவில் மட்டும் 3,67,629 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,000 பேர் வரை பலியாகியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 mins ago
வலைஞர் பக்கம்
11 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
58 mins ago
சினிமா
17 mins ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
ஓடிடி களம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago