சீனாவின் ஷென்சென் நகரில் பூனை, நாய் இறைச்சிகளுக்குத் தடை

By செய்திப்பிரிவு

சீனாவின் ஷென்சென் நகரில் பூனை, நாய் ஆகியவற்றின் இறைச்சிகளை உண்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சீனாவில் பூனை, நாய்களின் இறைச்சிகளை உண்பதற்குத் தடை விதிக்கப்பட்ட முதல் நகராக ஷென்சென் நகரம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பரவி வரும் கரோனா வைரஸ் தொற்று விலங்குகளின் இறைச்சி மூலம் பரவியது என்று கூறப்பட்டு வரும் நிலையில், இந்தத் தடையை ஷென்சென் நகரம் விதித்துள்ளது.

இதுகுறித்து ஷென்சென்னில் உள்ள அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், ”நாய், பூனைகள் பிற விலங்குகளைக் காட்டிலும் மனிதர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளன. எனவே பூனை, நாய்களின் இறைச்சிக்குத் தடை விதிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய தடை மே மாதம் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவின் வூஹான் நகரில் உருவான கரோனா வைரஸுக்கு இதுவரை உலக அளவில் 9 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இத்தாலி, ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகள் கரோனா வைரஸுக்கு அதிகப்படியான உயிரிழப்பைச் சந்தித்துள்ளன. உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் கரோனா வைரஸுக்கு சுமார் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 5,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

54 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்