கரோனா தொற்று: சீனாவைத் தாண்டியது ஸ்பெயின்

By செய்திப்பிரிவு

ஸ்பெயினில் கரோனா வைரஸுக்கு இதுவரை 85,195 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட சீனாவின் எண்ணிக்கையை விட அதிகம்.

இதுகுறித்து ஸ்பெயின் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ஸ்பெயினில் கோவிட் காய்ச்சலுக்கு சுமார் 85,195 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,340 பேர் பலியாகினர். 5,000க்கும் அதிகமானவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 2,000க்கும் அதிகமானவர்கள் கோவிட்-19 காய்ச்சல் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஸ்பெயினில் கரோனா தொற்றின் வீரியம் குறைந்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், ஸ்பெயினில் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை அவசர நிலை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ்,190-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா, இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.

உலகம் முழுவதும் கோவிட்-19 காய்ச்சலுக்கு சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 34,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் கோவிட்-19 காய்ச்சலுக்கு இத்தாலியும், ஸ்பெயினும் அதிக அளவிலான உயிர் பலியைக் கொடுத்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

இந்தியா

7 mins ago

இந்தியா

50 mins ago

உலகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

5 hours ago

க்ரைம்

3 hours ago

மேலும்