ஈரானில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா வைரஸுக்கு 144 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து பலியானவர்களின் எண்ணிக்கை 2,378 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ஈரானின் சுகாதாரத் துறை அமைச்சகம் கூறும்போது, “ஈரானில் கரோனா வைரஸுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 144 பேர் பலியாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஈரானில் கோவிட்-19 காய்ச்சலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 2,378 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 32,332 பேர் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சுமார் 2,000க்கும் அதிகமானவர்கள்
ஆபத்தான கட்டத்தில் உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் கோவிட் காய்ச்சலால் இறப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டன. பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து கோவிட் காய்ச்சல் பரவலைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் ஈரானுக்கு உதவ அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் முன்வந்த நிலையில் ஈரான் அந்த உதவிகளை மறுத்துவிட்டது.
சீனாவின் வூஹான் நகரில் உருவான கோவிட் -19 (கரோனா வைரஸ்) காய்ச்சலுக்கு இதுவரை உலக அளவில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
31 secs ago
இந்தியா
5 mins ago
தமிழகம்
26 mins ago
சினிமா
22 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
46 mins ago
க்ரைம்
52 mins ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
57 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago