கரோனாவால் பெரிதும் பாதிப்பைச் சந்தித்துள்ள முதல் 5 நாடுகள்

By செய்திப்பிரிவு

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.

கோவிட்-19 காய்ச்சல் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் 3,08,231 பேர் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில் உலகம் முழுவதும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸால் அதிக அளவில் பாதிப்புகளைச் சந்தித்துள்ள முதல் 5 நாடுகளின் விவரம்.
சீனா

கோவிட்-19 காய்ச்சல் முதலில் பரவிய சீனாவில் இதுவரை கோவிட்- 19 காய்ச்சலுக்கு 81,054 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,261 பேர் பலியாகி உள்ளனர். 72 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இத்தாலி

சீனாவைத் தொடர்ந்து அதிகப்படியான பாதிப்பை ஐரோப்பிய நாடான இத்தாலி அடைந்துள்ளது. இத்தாலியில் இதுவரை கோவிட் காய்ச்சலுக்கு 53,578 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,825 பேர் பலியாகியுள்ளனர். 6,000க்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அமெரிக்கா

அமெரிக்காவில் இதுவரை கோவிட் காய்ச்சலுக்கு 26,900 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 348 பேர் பலியாகியுள்ளனர். 178 பேர்
குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஸ்பெயின்

ஸ்பெயினில் இதுவரை கோவிட் காய்ச்சலுக்கு 25,496 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,381 பேர் பலியாகியுள்ளனர். 2,125
குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஜெர்மனி

ஜெர்மனியில் கோவிட் காய்ச்சலுக்கு 22,364 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 84 பேர் பலியாகியுள்ளனர். 209 பேர்
குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நாடுகளைத் தொடர்ந்து ஈரான், பிரான்ஸ், தென்கொரியா, ஸ்விட்சர்லாந்து, யுகே போன்றவை கோவிட் காய்ச்சலால் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

55 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

மேலும்