பாகிஸ்தானில் கரோனா வைரஸுக்கு 500 பேர் பாதிப்பு: முழு அடைப்புக்கு இம்ரான் கான் மறுப்பு

By செய்திப்பிரிவு

பாகிஸ்தானில் கரோனா வைரஸுக்கு 500 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இம்ரான் கான் இன்னும் அங்கு முழு அடைப்புக்கான உத்தரவை அமல்படுத்தாமல் இருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் கோவிட்-19 காய்ச்சலுக்கு இதுவரை 501 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3 பேர் வரை பலியாகியுள்ளனர். சிந்து மாகாணத்தில் கோவிட் காய்ச்சலுக்கு மட்டும் 252 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துமாறு மருத்துவ நிபுணர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தானில் முழு அடைப்பை அமல்படுத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மறுத்துவிட்டார்.

இதுகுறித்து இம்ரான் கான் கூறும்போது, “முழு அடைப்பு என்பது ஊரடங்கு உத்தரவைப் போன்றது. அது தேவையில்லாத பதற்றத்தை அளிக்கும். அதை நாங்கள் அளிக்க விரும்பவில்லை. இதனால் எல்லை மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் இருந்து ஈரானுக்கு ஆன்மிக யாத்திரை சென்றவர்கள் மூலமாகத்தான் அந்நாட்டில் கரோனா வைரஸ் பரவியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போதைய தகவலின்படி உலகம் முழுவதும் 2,76,474 பேர் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11,586 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 mins ago

வாழ்வியல்

41 mins ago

உலகம்

39 mins ago

தமிழகம்

49 mins ago

இந்தியா

52 mins ago

சினிமா

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்