ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 147 பேர் பலியானதைத் தொடர்ந்து பலியானவர்களின் எண்ணிக்கை 1,433 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை தரப்பில், ''ஈரானில் கடந்த 24 மணிநேரத்தில் 147 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து அங்கு கோவிட்-19 காய்ச்சலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,433 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 19,644 பேர் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,000க்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்” என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது.
கோவிட் - 19 காய்ச்சலால் ஈரான் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. இறப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கோவிட்-19 காய்ச்சல் காரணமாக வெள்ளிக்கிழமை வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டன. பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளன.
சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.
கரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 10,000 பேர் வரை பலியாகியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
18 mins ago
க்ரைம்
57 mins ago
உலகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
வேலை வாய்ப்பு
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
கல்வி
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
வாழ்வியல்
4 hours ago