கரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, கனடாவில் நாடாளுமன்றக் கூட்டங்கள் ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் கோவிட்-19 (கரோனா வைரஸ்) காய்ச்சலுக்கு 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் பலியாகியுள்ளார். இந்த நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி ட்ரூடோவுக்கு கோவிட்-19 காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் கரோனா வைரஸ் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக பிரதமர் அலுவலகத்துக்கு ஐஸ்டின் செல்ல மாட்டார் என்றும் வீட்டில் இருந்தபடியே பணியாற்றுவார் என்றும் கனடா அரசு அறிவித்துள்ளது.
கனடாவில் கோவிட்-19 காய்ச்சல் பரவலைத் தடுக்கும் வகையில், நாடாளுமன்றக் கூட்டங்கள் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவைப்பட்டால் இந்தத் தடை நீட்டிக்கப்படலாம் என்று நாடாளுமன்றத் தலைவர் பப்லோ ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், கோவிட் - 19 காய்ச்சல் பரவுவதைத் தடுக்க போதிய விழிப்புணர்வு நடவடிக்கைகளில் கனடா அரசு இறங்கியுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
13 mins ago
தமிழகம்
20 mins ago
இந்தியா
22 mins ago
சினிமா
35 mins ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
9 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
10 hours ago
விளையாட்டு
11 hours ago