ஈரானில் கரோனா வைரஸுக்கு பலி எண்ணிக்கை 512 ஆக அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

ஈரானில் கரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 512 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை அமைச்சகம் கூறும்போது, “ஈரானில் கோவிட்-19 காய்ச்சலுக்கு 81 பேர் பலியானதைத் தொடர்ந்து பலியானவர்களின் எண்ணிக்கை 512 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 11,364 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் கோவிட் -19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

ஈரானின் சுகாதாரத் துறை துணை அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், ஈரானின் துணை அதிபர் மவுசமெக் எம்தெகர் கோவிட் -19 (கரோனா வைரஸ்) காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதை ஈரான் அரசு
சில நாட்களுக்கு முன்னர் உறுதிப்படுத்தியது.

மேலும், ஈரானில் கோவிட்-19 காய்ச்சல் பாதிப்பின் தீவிரம் அதிகமாக இருப்பதைத் தொடர்ந்து அங்கு வெள்ளிக்கிழமை வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டன. பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளன.

தற்போது கோவிட் -19 காய்ச்சல் 111 நாடுகளில் நோய்த் தொற்றை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

51 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்