கரோனா வைரஸ் பாதிப்பு: சீனாவில் பலி எண்ணிக்கை 2,744 ஆக அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

கோவிட் -1 9 ( கரோனா வைரஸ் ) காய்ச்சல் பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,744 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சீன சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “சீனாவில் கோவிட் 19 (கரோனா வைரஸ்) காய்ச்சல் தீவிரம் குறைந்த நிலையில் காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,744 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் புதிதாக 433 பேருக்கு கோவிட் - 19 (கரோனா வைரஸ்) காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை சீனாவில் 78,487 பேருக்கு கோவிட் ( கரோனா வைரஸ்) காய்ச்சல் பாதிப்பு உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் கரோனா வைரஸுக்கு இதுவரை சுமார் 81, 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது.

தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

36 mins ago

தமிழகம்

5 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்