தென்கொரியாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு 8 பேர் பலி : 893 பேர் பாதிப்பு

By செய்திப்பிரிவு

தென்கொரியாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து தென்கொரியாவின் மத்திய நோய் தடுப்பு மையம் கூறும்போது, “தென்கொரியாவில் கோவிட் 19 (கரோனா ) வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 893 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 63 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிச் செய்யப்பட்டது” என்று தெரிவித்துள்ளது.

தென் கொரியாவுக்குப் பயணம் மேற்கொள்பவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுங்கள். தேவை ஏற்பட்டால் மட்டும் தென் கொரியாவுக்குச் செல்லவும். குறிப்பாக வயதானவர்கள், நீண்டகால நோய் இருக்கும் முதியவர்கள் செல்வதைத் தவிர்க்கவும்" என அமெரிக்கா தங்கள் நாட்டு மக்களுக்கு எச்சரித்துள்ளது.

மேலும் தென் கொரியாவுக்கு செல்லும் மக்களுக்கு 2-ம் எண் எச்சரிக்கையும் அமெரிக்கா விடுத்துள்ளது.

இதேபோல பிரிட்டனும், தங்கள் நாட்டைச் சேர்ந்த மக்கள் தென் கொரியாவின் டேகு, சியாங்டோ நகருக்கு அவசியம் ஏற்பட்டால் மட்டுமே செல்ல வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.

சீனாவின் ஹுபெய் மாகாணம், வூஹான்நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் கோவிட்-19 காய்ச்சல் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

55 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

10 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்