தென்கொரியாவில் கரோனா வைரஸால் 204 பேர் பாதிப்பு

By செய்திப்பிரிவு

தென்கொரியாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு சுமார் 204 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து தென்கொரியாவின் நோய் தடுப்பு மையம் தரப்பில், “தென்கொரியாவில் வெள்ளிக்கிழமையன்று இன்னும் கூடுதலாக 100 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தென்கொரியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 204 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் கொரியாவில் கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் தேதி முதல் சுமார் 16,000 பேருக்கு கரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 13,016 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பில்லை என்றும், இன்னும் 3,180 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு குறித்த பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு கோவிட்-19 (கரோனா வைரஸ்) காய்ச்சல் இருந்தது தெரியவந்தது.

சீனா மட்டுமல்லாமல் 20-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் கோவிட்-19 ( கரோனா வைரஸ்) காய்ச்சல் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 2,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

உலகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்