மூளை அறுவை சிகிச்சையின்போது வயலின் வாசித்த பெண்

By செய்திப்பிரிவு

தன் மூளையிலிருந்த புற்றுநோய்க் கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சையின்போது ஒரு பெண் வயலின் வாசித்த நெகிழ்ச்சியான சம்பவம் லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அரங்கேறியுள்ளது.

ஆப்ரேஷன் அறையில் டாக்மர் டர்னர் (53), வயலினை இசைக்க, மருத்துவர்கள் அவரது மூளையிலிருந்த புற்றுநோய்க் கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.

டங்மர் டர்னர் அறுவை சிகிச்சையின்போது தனது வயலின் வாசிக்கும் திறனை இழந்து விடாமல் இருக்க, மருத்துவர்கள் இந்த யோசனையை அவருக்கு வழங்கினர்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறும்போது, “டங்மருக்கு இந்த வயலின் எவ்வளவு முக்கியமானது என்று எங்களுக்கு நன்கு தெரியும். எனவே, அவரது மூளை நுட்பமான பகுதிகளில் செயல்படுவதை நாங்கள் பாதுகாக்க வேண்டியது அவசியம். எனவே, அவரை வயலின் வாசிக்க அனுமதித்தோம்” என்றார்.

டர்னர் கூறும்போது, “வயலின் எனது கனவு. நான் எனது 10 வயதிலிருந்து வயலினை வாசித்துக் கொண்டிருக்கிறேன். நான் வயலின் வாசிக்கும் திறனை இழப்பது என்பது மனமுடையும் செய்தி என்பதால் மருத்துவர்கள் எனது கவலையை உணர்ந்து கொண்டார்கள்” என்றார்.

தவறவீடாதீர்!

பயிர் காப்பீட்டுக்கு பணம் செலுத்த மனமில்லையா? - மத்திய அரசுக்கு சிதம்பரம் கண்டனம்

ஐஐடி பெண்கள் கழிப்பறையில் செல்போன் கேமரா மூலம் படம்: உதவிப் பேராசிரியர் கைது

8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் செயல்பட தொடங்கிய அலெப்போ விமான நிலையம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்