சிரியாவில் கடந்த இரண்டு வாரங்களில் சுமார் 2 லட்சத்துக்கு அதிகமான மக்கள் வடக்கு பகுதியிலிருந்து இடப்பெயர்ந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை தரப்பில், ‘‘சிரியாவில் நடைபெறும் தாக்குதல் காரணமாக கடந்த 12-ம் தேதி முதல் 25-ம் தேதிவரை மாரெட் அல் நுமன் பகுதியிலிருந்து இரண்டு லட்சத்துக்கு அதிகமான மக்கள் வெளியேறியுள்ளனர். அந்த பகுதியே வெற்றிடமாக காணப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக சிரியாவில் அரசுப் படையுடன் ஈரான், ரஷ்யா இணைந்து நடத்தும் தாக்குதலை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கண்டித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிரியா போர்
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்துவரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில் ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது. ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன.
இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள சில இடங்களில் சண்டை அவ்வப்போது நடந்து வருகிறது. இந்த உள்நாட்டுப் போரில் இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் வேறு நாட்டுக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
58 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
10 hours ago
சினிமா
11 hours ago
இந்தியா
12 hours ago
தமிழகம்
12 hours ago