கனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆகப் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்கப் புவியியல் மையம் தரப்பில் , “கனடாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆகப் பதிவாகியது. இதன் ஆழம் 10 கிலோ மீட்டர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை என்றும் இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்றும் கனடா தெரிவித்துள்ளது.
மேலும் இதே பகுதியில் சில மணிநேரங்களுக்கு முன்னர், 5.7 மற்றும் 5.2 என்ற ரிக்டர் அளவுகளில் இரண்டு மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், கனடா உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்டுள்ள தொடர் நிலநடுக்க அதிர்வுகள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
இந்தியா
22 mins ago
தமிழகம்
53 mins ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago