சிரியாவில் தொடரும் தாக்குதல்: பொதுமக்கள் பாதிப்பு

By செய்திப்பிரிவு

சிரியாவில் தொடர்ந்து குடிமக்கள் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து ஊடகங்கள், “சிரியாவின் ஹமா மாகாணத்தில் உள்ள அல் அசிசியா கிராமத்தில் பொதுமக்கள் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ஒருவர் பலியானார். பல வீடுகள் பாதிக்கப்பட்டன. மேலும் இட்லிப் பகுதியிலும் தாக்குதல் நடத்தப்பட்டது” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் இட்லிப் மாகாணத்தில் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டதாக சிரிய பாதுகாப்புப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கி எல்லையையொட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி அதிபர் எர்டோகன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியிலிருந்து அமெரிக்கப் படைகள் தங்கள் படைகளைத் திரும்பப் பெற்றனர். சிரியாவில் துருக்கிப் படையினர் குர்து படைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தினர்.

துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறினர். பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் தொடர்ந்து சிரியாவின் வடக்குப் பகுதியில் துருக்கி ராணுவம் குர்து படைகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

57 secs ago

சினிமா

5 mins ago

சினிமா

8 mins ago

வலைஞர் பக்கம்

12 mins ago

சினிமா

17 mins ago

சினிமா

22 mins ago

இந்தியா

30 mins ago

க்ரைம்

27 mins ago

இந்தியா

33 mins ago

தமிழகம்

55 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்