இலங்கை அதிபர் தேர்தல் 80 % வாக்குப்பதிவு

By செய்திப்பிரிவு

இலங்கை அதிபர் பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவில் சுமார் 80% சதவீத வாக்குகள் பாதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 8-வது அதிபரைத் தேர்ந்தெடுக்க இன்று (சனிக்கிழமை) வாக்குப் பதிவு காலை 7 மணி முதல் தொடர்ந்து நடைபெற்றது. அதிபர் தேர்தல் காரணமாக இலங்கை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

சுமார் 60,000 போலீஸார் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

பலத்த பாதுகாப்பு இருப்பினும் இலங்கையின் வடக்குப் பகுதியில் உள்ள தீவுப் பகுதியான மன்னாரில் அதிபர் தேர்தலில் வாக்களிப்பதற்காக முஸ்லிம் வாக்காளர்களை ஏற்றி வந்த பேருந்து மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

இந்த நிலையில் இலங்கை தேர்தல் வாக்குப் பதிவு முடிவடைந்துள்ளது.

இதுகுறித்து இலங்கை ஊடகங்கள், ”இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப் பதிவு சதவீதம் ஒட்டுமொத்தமாக 80% வாக்குகள் பதிவாகியுள்ளது. சுமார் 15 .9 மில்லியன் மக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இன்ரே வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ளது. தபால் ஒட்டுகள் முதலில் எண்ணப்படுகின்றன.” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சவுக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் சஜித்பிரேமதாச உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

மேலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், இந்தியவம்சாவளியைச் சேர்ந்த சுப்ரமணியம் குணரத்னம், மக்கள் விடுதலை முன்னணியின் அநுர குமார திசநாயக்க, இலங்கை சோசலிச கட்சி சார்பில் அஜந்தா பெரேரா, தேசிய மக்கள் இயக்கம் சார்பில் முன்னாள் ராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்க, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா உட்பட மொத்தம் 35 பேர் போட்டியிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

32 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்