கலிபோர்னியாவில் பிறந்த நாளன்று பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவர்: 2 பேர் பலி 

By செய்திப்பிரிவு

கலிபோர்னியாவில் பள்ளியில் மாணவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் பலியாகினர். மூன்று பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில், ''அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தென் பகுதியில் உள்ளது சாண்டா கிளாரிடா நகர். இங்குள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில் 16 வயதான மாணவர் ஒருவர் தனது பிறந்த நாளன்று சக மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 மாணவர்கள் பலியாகினர். மூன்று பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டார் என்றும் மாணவர் தலையில் குண்டு பாய்ந்துள்ளதால் தொடர்ந்து அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அமெரிக்காவின் மேற்கு நியூயார்க்கில் உள்ள அல்பியான் நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் மீது பள்ளி ஊழியர்கள் மற்றும் மாணவர்களைத் தாக்கத் திட்டமிட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

48 mins ago

கருத்துப் பேழை

44 mins ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

28 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

6 mins ago

மேலும்