ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
இதுகுறித்து ஆப்கன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை கூறும்போது, “ஆப்கனில் பக்லான் மாகாணத்தில் தலிபான்களுக்கு எதிராக சிறப்பு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேடுதல் வேட்டையில் தலிபான் தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
முன்னதாக புதன்கிழமை பதக்ஷான், தஹார் ஆகிய மாகாணங்களில் தலிபான்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தப்பட்டது” என்று தெரிவித்துள்ளது.
எனினும் தலிபான்களுக்கு எதிரான இந்த ராணுவ நடவடிக்கையின் முழு விவரத்தை ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிடவில்லை.
முன்னதாக, ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் வார்டார்க் மற்றும் பக்திகா மாகாணங்களில் ஆப்கன் ராணுவம், தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியது. இதில் 7 தலிபான் தீவிரவாதிகள் பலியாகினர். 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
தலிபான்களுடன் பேச்சுவார்த்தை
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு அமைதியான தீர்வு காண்பதில், தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மேலும், ஆப்கனில் 18 ஆண்டுகளாக நடந்து வரும் போரிலிருந்து தன்னை விடுத்துவித்துக் கொள்ள அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
இதனை மையமாகக் கொண்டு ஆப்கன் அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பாக 9 சுற்றுகள் அமெரிக்கா தலைமையில் நடந்தது. இதன் அடிப்படையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தலிபான்கள் தரப்பு ஏற்றுக்கொண்ட நிலையில், ஆப்கனில் தலிபான்கள் நடத்திய தீவிரவாதத் தாக்குதலில் அமெரிக்கப் படை வீரர்கள் கொல்லப்பட்டதற்கு தலிபான்கள் பொறுப்பேற்றனர். இதனைத் தொடர்ந்து தலிபான்களுடனான பேச்சுவார்த்தை இறந்து விட்டதாக ட்ரம்ப் அறிவித்தார்.
இந்நிலையில் ஆப்கனில் அமைதி ஏற்பட, தலிபான்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கையில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை தலிபான்களின் பிரதிநிதிகள் சமீபத்தில் சந்தித்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 mins ago
வணிகம்
30 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
க்ரைம்
1 hour ago
சுற்றுச்சூழல்
2 hours ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
3 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
சுற்றுலா
4 hours ago
சினிமா
4 hours ago