சிறை பிடிக்கப்பட்ட இங்கிலாந்து கப்பல் விரைவில் விடுவிக்கப்படும்:   ஈரான்

By செய்திப்பிரிவு

ஈரானால் சிறை பிடிக்கப்பட்ட இங்கிலாந்து கப்பல் விரைவில் விடுவிக்கப்படும் என்று அந்நாடு தெரிவித்துள்ளது.

'ஸ்டெனா இம்பெரோ' என்ற இங்கிலாந்து கப்பலை ஈரான் கடற்படை கடந்த ஜூலை மாதம் சிறை பிடித்தது. அந்தக் கப்பலில் இருந்த படைத் தளபதி மற்றும் ஊழியர்கள் மீது எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் அவர்களை விடுவிப்பதாகவும், ஆனால் சட்டவிதிகளை மீறியதால் கப்பல் மட்டும் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஈரான் அரசு ஞாயிற்றுக்கிழமை கூறும்போது, “இங்கிலாந்து கப்பல் 'ஸ்டெனா இம்பெரோ’ வரும் நாட்களில் விடுவிக்கப்படும். இது தொடர்பான சட்ட நடைமுறைகள் முடிந்துவிட்டன” என்று தெரிவித்தது. இதனை ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸும் உறுதிப்படுத்தினார்.

அணு ஆயுத சோதனையில் அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் வலுத்து வரும் நிலையில், வளைகுடா பகுதியில் பதற்றம் நிலவி வரும் நிலையில், கடந்த ஜூலை 19-ம் தேதி இங்கிலாந்து நாட்டுக் கொடியுடன் சவுதிக்கு ஹார்முஸ் ஜலசந்தி பகுதியைக் கடந்து சென்று கொண்டிருந்த ‘ஸ்டெனா இம்பெரோ' என்ற எண்ணெய்க் கப்பலை ஈரான் அரசு சிறை பிடித்தது.

இந்தக் கப்பலில் இருந்த 23 பேரில் 18 பேர் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மகாராஷ்டிரா, பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இதர ஊழியர்கள் ரஷ்யா, பிலிப்பைன்ஸ், லாட்வியாவைச் சேர்ந்தவர்கள் .

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

வேலை வாய்ப்பு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்