ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிராக நடக்கும் உள்நாட்டுப் போரில் இந்த ஆண்டின் முதற்பகுதியில் மட்டும் 3,812 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் அரசுக்கும், தலிபான்களுக்கும் இடையே 18 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதில் சமீபகாலமாக தலிபான்கள் பிரதிநிதிகளுடன் ஆப்கனில் அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதற்கிடையிலும் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் நடக்கும் உள்நாட்டுப் போர் காரணமாக இந்த ஆண்டின் முதற் பகுதியில் மட்டும் குண்டுவெடிப்பு மற்றும் வான்வழித் தாக்குதலால் 3, 812 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் தரப்பில், “இந்த ஆண்டின் முதற்பகுதியில் மட்டும் ஆப்கானிஸ்தானில் 3,812 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் தலிபான்களால் 531 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1,437 பேர் காயமடைந்துள்ளனர்.
ஐஎஸ் தீவிரவாதிகளால் 985 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் அரசு அதிகாரிகள், பழங்குடிகள், தன்னார்வலர்கள் என அனைவரும் அடங்குவர்.
அரசுப் படைகளால் சுமார் 717 பேர் கொல்லப்பட்டனர். மேலும் வான்வழித் தாக்குதலால் 519 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 144 பெண்கள், 327 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கக் கூட்டுப் படையும் அங்கு தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
சினிமா
4 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
சினிமா
9 hours ago
இந்தியா
10 hours ago