நியூஸிலாந்தின் தெற்கு தீவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் உடனடியாகவெளியாகவில்லை.
வான்கா நகரின் வட கிழக்கு அருகே 30 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அந்நாட்டின் ஜியோநெட் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் கடுமையானதாக இருந்ததாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதுவரை நிலநடுக்கத்தின் தாக்கம் மற்றும் பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.
நியூஸிலாந்தில் கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவான நிலநடுக்கத்துக்கு பின்னர், நேபாளம், வடஇந்தியா, பாகிஸ்தான் ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 mins ago
இந்தியா
12 mins ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
உலகம்
2 hours ago
வணிகம்
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago