சர்வதேச கான் திரைப்பட விருது விழா பிரான்ஸ் நாட்டில் கோலாகலமாக தொடங்கியுள்ளது.
பிரான்ஸின் கான் நகரில் ஆஸ்கர் விருதுக்கு நிகரான கான் திரைப்பட விருது விழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இந்த ஆண்டு விழா கடந்த 13-ம் தேதி தொடங்கியது. வரும் 24-ம் தேதி வரை விழா தொடர்ந்து நடைபெறுகிறது.
இதில் சிறந்த திரைப்படம், சிறந்த வாழ்நாள் சாதனையாளர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த நடிகர், நடிகை உட்பட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப் பட உள்ளன. இதற்காக ஹாலிவுட் உட்பட உலகம் முழுவதும் இருந்து திரைப்பட நட்சத்திரங்கள் கான் நகரில் குவிந்து வருகின்றனர்.
இந்தியாவில் இருந்து பாலிவுட் நட்சத்திரங்கள் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், வித்யா பாலன், சோனம் கபூர், மல்லிகா ஷெராவத், கேத்ரினா கெய்ப் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இதில் மல்லிகா ஷெராவத், கேத்ரினா கெய்ப் ஆகியோர் ஏற் கெனவே கான் நகரில் முகாமிட் டுள்ளனர். ஐஸ்வர்யா ராய், சோனம் கபூர் ஆகியோர் நேற்று மும்பையில் இருந்து கான் நகருக்குப் புறப்பட்டனர்.
கான் சர்வதேச திரைப்பட விழாவில் நேற்று கலந்து கொண்ட பிரபல மாடல் மிராண்டா கெர் தனது ‘பிங்க்' (இளஞ் சிவப்பு) நிற உடை மூலம் பார்வை யாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.
நேற்று இவ்விழாவின் ஒரு பகுதி யாக மேக்னம் பிங்க் அண்ட் பிளாக் எனும் ஐஸ்கிரீம் நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
அதில் சிறப்பு விருந்தினராக பிரபல மாடல் மிராண்டா கெர் (32) கலந்துகொண்டார். இளஞ்சிவப்பு நிற உடையில் அவர் சிவப்புக் கம்பளத்தின் மீது நடந்து வந்து பார்வையாளர்களின் முன்பு தோன்றினார்.
அந்த உடையில் கேமராக்களின் வெளிச்சங்களுக்கு இடையே பார்வையாளர்களின் மனதைக் கொள்ளையடித்துச் சென்றார். நீளமான அங்கி போன்ற அந்த உடையின் பாத முடிவை, இன்னொரு விருந்தினர் ஒருவர் தவறுதலாக மிதித்துவிட்ட போதும், கோபப்படாமல் அவர் சிரித்துக்கொண்டே சென்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
54 mins ago
சினிமா
2 hours ago
விளையாட்டு
3 hours ago
வணிகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
5 hours ago
க்ரைம்
5 hours ago
சுற்றுச்சூழல்
5 hours ago
க்ரைம்
5 hours ago
இந்தியா
5 hours ago
சினிமா
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago