போப் ஐ-பேட் ஏலம்: ஏழைக் குழந்தைகள் கல்விக்கு 40 ஆயிரம் டாலர் உதவி

By ஐஏஎன்எஸ்

போப் பிரான்சிஸ் பயன்படுத்திய ஆப்பிள் ஐ-பேட் ஏலத்தில் உருகுவேயில் ஏலத்தில் விடப்பட்டது. இதில் கிடைத்த ஏலத் தொகை உருகுவேவில் உள்ள ஏழைக் குழந்தைகளின் படிப்புக்குச் செலவிடப்பட உள்ளது.

வாட்டிகன் சென்றிருந்த உருகுவே பாதிரியார் கோன்சலோ அமேலியஸுக்கு தனது பெயர் பொறிக்கப்பட்ட ஐ-பேடை போப் பிரான்சிஸ் பரிசாக வழங்கியிருந்தார். அதனை தற்போது உருகுவே அரசு ஏலத்தில் விட்டது.

போப்பின் ஐ-பேட் சுமார் 40 ஆயிரம் டாலருக்கு விலைபோனது. இந்தத் தொகை முழுவதையும் ஏழை குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு செலவிடப்பட உள்ளது.

ஐ-பேடை ஏலத்தில் எடுத்தவரின் பெயரை உருகுவே வெளியிட மறுத்துள்ளது.

போப் பிரான்சிஸ், ஐ-பேடை வாங்கிய புதிதில், அந்த ஐ-பேடை பயன்படுத்தியே பல ட்வீட்களை போப் வெளியிட்டு வந்தார். அதேவேளையில் தொழில்நுட்பம் பல்வேறு சங்கடங்களுக்கு வழிவகுப்பதாகவும் அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

11 hours ago

க்ரைம்

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்