யுனிசெப் அமைப்புக்காக திரட்டப்பட்ட ரூ.3 லட்சத்தை திருடிய விமான பணியாளர் கைது

By பிடிஐ

ஐநா குழந்தைகள் நிதியத்துக்காக (யுனிசெப்) திரட்டப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான நாணயங்களை திருடிய அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவன பணியாளர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து துறைமுக ஆணைய காவல் துறை செய்தித் தொடர்பாளர் ஜோ பென்டன்ஜெலோ கூறியதாவது:

யுனிசெப் அமைப்புக்கு நிதி திரட்டுவது தொடர்பாக, அதனுடன் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் உடன்பாடு செய்து கொண்டுள்ளது. அந்த வகையில், விமான நிறுவன சிப்பந்திகள் யுனிசெப்புக்காக பயணிகளிடம் நன்கொடை வசூலித்து வருகிறார்கள்.

இதன்படி, அந்த நிறுவனத்தில் சிப்பந்தியாக பணிபுரிந்த மார்கோ காஸ்டா (56), அமெரிக்க டாலர், யூரோ, பிரிட்டன் பவுண்ட் என பல்வேறு நாட்டு நாணயங்களை பயணிகளிடமிருந்து திரட்டி உள்ளார். 317.5 கிலோ எடை கொண்ட சுமார் ரூ.3.2 லட்சம் மதிப்பி லான இந்த நாணயங்களை கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனது காரில் மறைத்து வைத்திருந்துள்ளார்.

இந்நிலையில் அவரது காரின் பின்புறம் வழக்கத்துக்கு மாறாக தாழ்வாக இருந்ததை பார்த்த அதிகாரிகள், அதில் வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் அதைப் பரிசோதித்துப் பார்த்தனர். அப்போது அதில் நாணயங்கள் இருந்தது தெரியவந்தது. இதை யடுத்து நாணயங்களை பறிமுதல் செய்து விசாரித்து வந்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் கடந்த 31-ம் தேதி காஸ்டாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 min ago

விளையாட்டு

51 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்