போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் பிரபல நடிகர் ஜாக்கிசானின் மகன் ஜெய்ஸி சான் (32) மீது நேற்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
ஹாங்காங்கில் பிரபல நடிகராகவும், பாடகராகவும் அறியப்பட்ட ஜெய்ஸி சான், தைவான் நடிகர் கோ சான் டங்குடன் இணைந்து தனது வீட்டில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர்களிடம் இருந்து 100 கிராம் அளவுக்கு கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 14 நாட்களுக்குப் பிறகு அந்த இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.
இந்நிலையில் நேற்று சீன நீதிமன்றத்தில் அவர்கள் இருவர் மீது முறைப்படி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
8 mins ago
இந்தியா
55 mins ago
ஜோதிடம்
52 mins ago
ஜோதிடம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
வணிகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago