வடகொரியா மீது கொண்டிருந்த பொறுமையை அமெரிக்கா இழந்துவிட்டது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் அமெரிக்காவுக்குச் சுற்றுபயணம் மேற் கொண்டிருக்கிறார். வெள்ளை மாளிகையில் ட்ரம்ப்பை மூன் ஜே இன் சந்தித்துப் பேசிய பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற இருவரும் வடகொரியாவின் அணுஆயுத சோதனை விமர்சித்து பேசினர்.
இதில் ட்ரம்ப் பேசும்போது, "நாம் வடகொரியாவின் அச்சுறுத்தலான ஆட்சியை எதிர் கொண்டுள்ளோம். வடகொரியா அதன் அண்டை நாடுகளின் பாதுகாப்பைப் பற்றி எண்ணுவதில்லை. வடகொரியா மீது பொறுமையை அமெரிக்கா இழந்துவிட்டது" என்றார்.
அணுஆயுத ஏவுகணை சோதனைகளைத் தொடர்ந்து நடத்திவரும் வடகொரியாவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
20 mins ago
தமிழகம்
10 mins ago
இந்தியா
28 mins ago
வாழ்வியல்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
உலகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
3 hours ago