அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நரேன் பிரபு, அவரது மனைவி ரெய்னா சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான் ஜோஸ் நகரைச் சேர்ந்தவர் நரேன் பிரபு. அங்குள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மூத்த தலைமை நிர்வாகியாகப் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி ரெய்னா. இத்தம்பதிக்கு மகள், மகன் உள்ளனர்.
மூத்த மகள் ரேச்சல் சில ஆண்டுகள் மிர்சா டாட்லிக் என்பவரை காதலித்து பின்னர் பிரிந்துவிட்டதாகக் கூறப் படுகிறது. இதனால் ஆத்திர மடைந்த டாட்லிக் கடந்த 3-ம் தேதி சான் ஜோஸ் நகரில் உள்ள நரேன் பிரபு வீட்டுக்குச் சென்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ரேச்சல் வீட்டில் இல்லை. திடீரென டாட்லிக், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக் கியை எடுத்து நரேன் பிரபுவையும் அவரது மனைவி ரெய்னாவையும் சுட்டுக் கொன்றார். தகவல் அறிந்து போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அங்கிருந்த தப்ப முயன்ற டாட்லிக், நரேன் பிரபுவின் 13 வயது மகனை மனித கேடயமாகப் பயன்படுத்தினார். ஆனால் சாதுரியமாக செயல்பட்ட போலீஸார், டாட்லிக்கை சுட்டு வீழ்த்தி கொன்றனர்.
இந்த சம்பவம் அமெரிக்கவாழ் இந்தியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
க்ரைம்
1 hour ago
உலகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
வேலை வாய்ப்பு
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
கல்வி
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
வாழ்வியல்
5 hours ago