தீவிரவாத பிடியில் பெல்ஜியம் - 4

By ஜி.எஸ்.எஸ்

பெல்ஜியத்தில் இரு முக்கிய இனங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று ஃப்ளெ மிஷ் இனம் என்று அழைக்கப் படுகிறது. இவர்களை ஃப்ளெமிங் என்றும் அழைப்பார்கள். இவர்கள் பெல்ஜியத்தின் வடக்குப் பகுதியில் அதிகமாக வசிக்கிறார்கள். இந்தப் பகுதி ஃப்ளான்டெர்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இவர்கள் டச் இனத்தவருடன் (நெதர்லாந்துக் காரர்கள்) நெருங்கிய உறவு கொண்டவர்கள். ஃப்ளெமிஷ் மொழி கூட டச்சு மொழியோடு ஒத்து இருக்கும். இவர்களை ஜெர்மானிய இனத்தின் ஒரு பகுதி என்று கூறலாம்.

பெல்ஜியத்தின் தெற்குப் பகுதியில் அதிகம் (கிட்டத்தட்ட முழுவதுமாகவே) வசிப்பது வாலூம் இன மக்கள். இவர்கள் பிரெஞ்சு மொழி பேசுபவர்கள்.

இந்த இரு இனங்களுக்கிடையே அடிக்கடி ‘‘நீயா நானா’’ நடந்த துண்டு. ஆனால் பெல்ஜிய புரட் சிக்கு (இது பற்றி பிறகு பார்ப்போம்) இருவருமே ஒத்துழைத்தனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் அரசியல் களத்திலும் பொருளா தாரத்திலும் வாலூன்கள்தான் அதிக சக்தி படைத்தவர்களாக இருந் தார்கள். வடக்குப்பகுதி பெரும் பாலும் விவசாயப் பகுதியாகவே இருந்து வந்தது. என்றாலும் 1930-க்களில் ஃப்ளெமிங் இனத்தவர் கொஞ்சம் கொஞ்சமாக தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர். ஃப்ளெமிஷ் மொழியை அதிகார பூர்வமாக்கினர். அதற்கு முன்னால் ஏதோ போனால் போகிறது என்று சில பள்ளிகளில் மட்டுமே ஃப்ளெமிஷ் மொழி மூலம் கல்வி பயிற்றுவிக்கப்பட்டது. மேலே குறிப்பிட்ட காலகட்டத்தில் கல்விக் கூடங்களில் ஃப்ளெமிஷ் மொழிக் கும் சம அந்தஸ்து கிடைத்தது. நீதிமன்றங்களிலும் ஃப்ளெமிஷ் மொழி பேசலாம் என்பது நடை முறைக்கு வந்தது. அரசின் தகவல் பரிமாற்றங்களில்கூட ஃப்ளெமிஷ் மொழி செல்லுபடியானது.

1960-க்களில் ஃப்ளெமிங், வாலூன் ஆகிய இரு இனங்களுமே அவரவர் பகுதிகளில் தன்னாட்சி அதிகாரம் பெற்றனர். அரசியல், சமூகம், கலாச்சாரம் ஆகிய அத்தனை தளங்களிலுமே இரு இனத்தவரும் தங்களின் பங்கை அதிகரித்தனர்.

என்றாலும் உலக வணிகம் என்கிற அளவில் ஃப்ளான்டெர்ஸ் ஒரு முக்கிய வணிக மையமானது. நவீன தொழில்நுட்பங்கள் அங்கு அதிகம் அறிமுகப்படுத்தப்பட்டன. சுற்றுலாப் பயணிகளும் அங்கு அதிகமாக வந்து சென்றனர்.

1993-ல் பெல்ஜிய அரசியலமைப் புச் சட்டம் திருத்தப்பட்டது. இதன்படி ஃப்ளான்டெர்ஸ், வலோ னியா ஆகிய இரு பகுதிகளுமே அதிகாரபூர்வமாக சுயாட்சி பெற்ற பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.

பிரான்ஸ் நாட்டில் ஜூலை புரட்சி நடைபெற்றது. இது தொடர் பான விவரங்கள் செய்தித் தாள் களில் வெளியாயின. இதைத் தொடர்ந்து பெல்ஜியத்திலும் புரட்சிக்கான விதைகள் தூவப் பட்டன. 1830 ஆகஸ்ட் 25 அன்று பிரஸ்ஸல்ஸில் உள்ள பெரும் அரங்கம் ஒன்றில் சிறப்பு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இது மன்னர் முதலாம் வில்லியமின் பிறந்த நாள் கொண்டாட்டமாக அரங்கேறியது. அதே சமயம் அரங்குக்கு வெளியே புரட்சியாளர்கள் அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்துக் கொண்டி ருந்தனர். பாதி நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோதே பெரும் பாலான பார்வையாளர்கள் அரங்கைவிட்டு வெளியேறி னார்கள். புரட்சியாளர்களோடு சேர்ந்து அவர்களும் கோஷங்களை எழுப்பினார்கள்.

பின்னர் அந்த நகரிலிருந்த அரசுக் கட்டிடங்களை அவர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர். புரட்சிக் கொடி ஒன்றும் உரு வானது.

மன்னர் முதலாம் வில்லியம் தனது இரண்டு மகன்களை, கலகங்களை அடக்குவதற்காக அனுப்பினார். ‘‘மன்னர் வில்லியம் இந்த நகருக்கு வர வேண்டும். ராணு வத்தினரை அழைத்துக் கொண்டு வரக் கூடாது. எங்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்’’என்று புரட்சியாளர்கள் அறிவித்தனர். ரிஸ்க்தான் என்றாலும் அங்கு மன்னர் வில்லியம் வந்தார். பேச்சு வார்த்தையின் முடிவில் வடக்குப் பகுதியையும் தெற்குப் பகுதியை யும் நிர்வாக ரீதியில் பிரிப்பதுதான் தீர்வு என்பதை இளவரசர்களில் ஒருவரான வில்லியம் ஒத்துக் கொண்டார்.

ஆனால் மன்னர் இதை ஏற்க வில்லை. சட்டம் ஒழுங்கை சீராக்க வும் இழந்த அரசுக் கட்டடங்களை மீட்கவும் 8000 ராணுவத்தினரை பிரஸ்ஸல்ஸுக்கு அனுப்பினார். இதற்குத் தலைமை தாங்கியவர் மற்றொரு இளவரசரான ஃபிரெடரிக். கடுமையான எதிர்ப்பு காத்திருந்தது. எதிர்ப்பு தரப்பில் நிர்வாகப் பிரிவினையையும் தாண்டி, சுயாட்சியையும் தாண்டி சுதந்திரம் தேவை என்று கேட்கத் தொடங்கினர். தனியாக அரசியல் அமைப்புச் சட்டம் ஒன்றையும் தாற்காலிகமாக அரசு ஒன்றையும் கூட உருவாக்கிக் கொண்டனர். 1830 அக்டோபர் 4 அன்று தங்களை சுதந்திர நாடாக பிரகடனப் படுத்திக் கொண்டது பெல்ஜியம்.

அதே ஆண்டு டிசம்பர் 20 அன்று லண்டனில் ஒரு மாநாடு நடைபெற்றது. அதில் பங்கேற்ற ஐந்து பெரும் ஐரோப்பிய நாடு களான ஆஸ்திரியா, பிரிட்டன், ப்ரஷ்யா, பிரான்ஸ் மற்றம் ரஷ்யா ஆகியவை பெல்ஜியத்தின் தனித் தன்மையை ஏற்றனர். ஆக பெல்ஜியத்துக்கு சர்வதேச அங்கீ காரம் கிடைத்துவிட்டது.

(உலகம் உருளும்)



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

19 mins ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வேலை வாய்ப்பு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்