உத்தரப் பிரதேசத்தில் மோடி தலைமையிலான பாஜக அரசு வெற்றி பெற்றதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பு செயலாளர் சீன் ஸ்பைசர் கூறும்போது, "உத்தரப் பிரதேசத்தில் இந்திய பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு வெற்றி பெற்றதற்கு அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார். மேலும் ட்ரம்ப் - மோடி இடையிலான உரையாடல் பின்னால் விவரமாக வெளியிடப்படும்" என்றார்.
ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு மோடியுடன் தொலைபேசி வாயிலாக நடத்தும் மூன்றாவது உரையாடல் இதுவாகும்.
முன்னதாக உத்தரப் பிரதேசத்தில் நடந்த சட்டப் பேரவை தேர்தலில் பாஜக 312 தொகுதிகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
சினிமா
5 hours ago
விளையாட்டு
6 hours ago
வணிகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
க்ரைம்
8 hours ago
சுற்றுச்சூழல்
8 hours ago
க்ரைம்
9 hours ago
இந்தியா
9 hours ago
சினிமா
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago