பாகிஸ்தானில் நடத்தப்படும் அமெரிக்க வான்வழித் தாக்குதலை நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் சவுத்ரி அலி கான் தெரிவித்தார்.
அதன்படி ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகளுடன் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சவுத்ரி அலி கான் நேற்று (செவ்வாய்கிழமை) ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில் ஆப்கான் எல்லை மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் பயங்கரவாதிகளை குறிவைத்து நடத்தப்படும் வான்வழித் தாக்குதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பாகிஸ்தானின் இந்த பேச்சுவார்த்தையை வரவேற்பதாகவும், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பாகிஸ்தான் ஒத்துழைப்பு அளித்தது பாராட்டத்தக்கது என்றும் இது குறித்து அமெரிக்க பிரதிநிதி ஃபெல்ட்மென் தெரிவித்ததாக பாகிஸ்தானின் 'டான்' பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
இந்தியா
47 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
ஜோதிடம்
11 mins ago
ஜோதிடம்
53 mins ago
இந்தியா
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago