பாகிஸ்தான், பெஷாவரில் பயணிகள் வேன் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலுக்கு 7 பேர் பலியாயினர்.
பெஷாவரில் கோஹாட் சாலையில் பேஸிட் கேல் பேருந்து நிறுத்தம் அருகே வேன் மீது குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இந்தக் குண்டு வெடிப்பு எப்படி நிகழ்ந்தது என்பது பற்றி முதற்கட்ட விவரங்கள் எதுவும் தெரியவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த குண்டுவெடிப்பு காரணமாக 7 பேர் பலியானதோடு மேலும் ஐவர் காயமடைந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர் ஒருவர் கூறியுள்ளார்.
தனியார் ஊடகம் வெளியிட்டுள்ள படத்தில் வேன் முழுதும் குண்டு வெடிப்பில் சிதைந்து போயுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இன்னமும் எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
முக்கிய செய்திகள்
உலகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
4 hours ago
சினிமா
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
8 hours ago