ட்ரம்ப்பை மீண்டும் சந்திக்க கிம் விருப்பம்

By செய்திப்பிரிவு

 

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணைச் சோதனைகளை கடந்த ஆண்டு நடத்தியது. இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டன.

வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.

ஆனால், இந்த எதிர்ப்புகளை சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணைச் சோதனைகளை நடத்தி வந்தது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.

எனினும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்ததது. இதனைத் தொடர்ந்து தென்கொரியாவில் நடந்த குளிர்கால கூட்டத் தொடரில் வடகொரியா - தென்கொரியா இடையே நட்புறவு உண்டானது. இதனைத் தொடர்ந்து வரலற்று சிறப்புமிக்க நிகழ்வாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், வடகொரிய அதிபர் கிம்மும் சிங்கப்பூரில் சந்தினர்.

இதில் அணு ஆயுதங்களை அழிக்க வடகொரியா சம்மதம் தெரிவித்தது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பைச் சந்திக்க கிம் மீண்டும் விருப்பம் தெரிவித்து கடிதம் எழுதி இருக்கிறார்.

அந்தக் கடிதம் குறித்து வெள்ளை மாளிகை தரப்பில், "வடகொரியாவின் இந்தக் கடிதம் அவர்கள் ஆணு ஆயுதக் கூடங்களை அழிப்பதில் முனைப்பாக இருக்கும் ஆர்வத்தைக் காட்டுகிறது. ட்ரம்ப்பை மீண்டும் சந்திக்க கிம் விரும்புகிறார் என்பதே அந்தக் கடிதத்தின் அடிப்படையாகச் சொல்லப்பட்டிருந்தது. இதற்கான முயற்சிகள் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்துள்ளது.

இரண்டாவது சந்திப்பு எங்கு, எப்போது நடைபெறும் என்று வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

51 mins ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்