ஈரான் தவறிழைத்துவிட்டது: எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்

By செய்திப்பிரிவு

ஈரான் தவறிழைத்துவிட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எங்கள் வான்பகுதியில் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாகவும்,மேலும், எங்களின் தேசிய இறையாண்மையை மீறி, பிராந்தியத்தில் பதட்டத்தை அதிகப்படுத்த அமெரிக்கா முயற்சிப்பதாகவும் ஈரான் வியாழக்கிழமை குற்றம் சாட்டியிருந்தது.

ஈரானின் இந்தக் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கத் தரப்பில், ''தங்களது ஆளில்லா விமானம் ஒன்று சுடப்பட்டதாகவும் அது சர்வதேச வான்வெளிப் பாதையிலேயே பறந்தது'' என்றும் பதிலளிக்கப்பட்டது.

இந்நிலையில் ஈரான் மிகப் பெரிய தவறிழைத்துவிட்டதாக ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

மேலும், ஈரானுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தாக்குதல் நடத்துமாறு அமெரிக்க ராணுவத்திற்கு ட்ரம்ப் உத்தரவிட்டதாகவும் பின்னர் அதனைத் திரும்பப் பெற்றதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து அமெரிக்கா - ஈரான் இடையே பதற்றம்  நிலவி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 mins ago

சினிமா

9 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

தமிழகம்

7 mins ago

சினிமா

25 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

19 mins ago

சினிமா

30 mins ago

சினிமா

33 mins ago

வலைஞர் பக்கம்

37 mins ago

சினிமா

42 mins ago

சினிமா

47 mins ago

மேலும்