ஈரான்தான் எண்ணெய்க் கப்பலைத் தாக்கியது: ட்ரம்ப் திட்டவட்டம்

By செய்திப்பிரிவு

ஹார்மாஸ் கடற்பகுதியில் எண்ணெய்க் கப்பலைத் தாக்கியது ஈரான்தான் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அணு ஆயுத சோதனை ஒப்பந்த மீறலில் ஈரான் - அமெரிக்கா இடையே மோதல் அதிகரித்த நிலையில் வளைகுடா பகுதியில் தொடர்ந்து எண்ணெய்க் கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதற்கு ஈரானை அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.

அந்த வகையில் வியாழக்கிழமையன்று ஹர்மஸ் கடற்பகுதியில் (உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதிக்கான ஒரு முக்கிய நீர்வழி) இரண்டு எண்ணெய்க் கப்பல்களைத் தாக்கியது ஈரான்தான் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ குற்றம் சாட்டியிருந்தார்.

இதனை ஈரான் திட்டவட்டமாக மறுத்ததுடன், தாக்குதலுக்கு உள்ளான கப்பலுக்கு உதவியதாகவும், கப்பலிலிருந்த குழுவைக் காப்பாற்றியதாகவும் பதிலளித்தது.

இந்நிலையில் இந்தத் தாக்குதலை ஈரான் தான் நடத்தியுள்ளது என்று அமெரிக்க அதிபர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்ரம்ப் கூறும்போது, ''ஹார்மஸ் எண்ணெய்க் கப்பல் தாக்குதலை ஈரான் தான் நடத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோவை அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ளது'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

14 mins ago

இந்தியா

22 mins ago

சுற்றுச்சூழல்

32 mins ago

இந்தியா

35 mins ago

இந்தியா

42 mins ago

இந்தியா

27 mins ago

விளையாட்டு

48 mins ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்