லிபியாவின் நடந்த வான்வழித் தாக்குதலில் 4 பேர் பலியாகினர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக சிரியா பாதுகாப்புப் படைகள் கிளர்ச்சியாளர்களுடன் சண்டையிட்டு வருகின்றன. இதில் லிபியா தலைநகர் திரிபோலியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 4 பேர் பலியாகினர். 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதியிலிருந்து லிபியாவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள்174 பேர் பலியாகி உள்ளனர். 700க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
முன்னதாக, எகிப்து புரட்சியைத் தொடர்ந்து 2011-ம் ஆண்டு லிபிய கிளர்ச்சியின்போது, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கின. இதில், 34 ஆண்டுகள் லிபிய அதிபராக இருந்த முவம்மர் கடாபி கொல்லப்பட்டார்.
அதன்பின், ஐ.நா. ஆதரவுடன் தேசிய இடைக்கால பேரவையின் கீழ் ஆட்சி அமைந்தது. ஆனால், அதன்பின் லிபியாவில் குழப்பம் ஏற்பட்டது. ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் லிபியாவில் போட்டி நாடாளுமன்றங்களை ஏற்படுத்தி இரு பிரிவாக அரசாட்சி செய்து வருகின்றனர்.
கடாபியின் மறைவுக்கு பிறகு லிபியாவில் ஐஎஸ் அமைப்பு அங்கு வலுவாக காலூன்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
விளையாட்டு
11 hours ago
சினிமா
12 hours ago
இந்தியா
13 hours ago
தமிழகம்
13 hours ago