மியான்மரில் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு இதுவரை 50 பேர் பலியானதாக நம்பப்படுகிறது.
இதுகுறித்து மியான்மர் ஊடகங்கள் தரப்பில், '' மியான்மரின் வடக்குப் பகுதியில் உள்ள காஞ்சின் மாகாணத்தில் ஹபகண்ட் பகுதியில் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் 50 பேர் பலியானதாக நம்பப்படுகிறது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. பலர் சேறுக்கு அடியில் சிக்கி உள்ளனர் .இதனால் அவர்களை மீட்பது சிக்கலாக உள்ளது.
மேலும் இந்த நிலச்சரிவில் இயந்திரங்களும் சிக்கியுள்ளன. இதனால் மீட்புப் பணிகள் தொடர்ந்து தாமதமாகி வருகின்றது'' என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து உள்ளூர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டபோது அவர்கள் சரியாகப் பதிலளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் உள்ளூர் அதிகாரிகளை தன்னார்வ நிறுவனங்களுடன் இணைத்து மீட்புப் பணிகள் நடைபெறுவதாக மியான்மர் அரசு தெரிவித்துள்ளது.
கடந்த மாதமும் இங்கு நிலச்சரிவு ஏற்பட்டது என்றும் இதிலும் சில மீட்புப் பணி இயந்திரங்கள் சிக்கிக் கொண்டன. ஆனால் இதில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
18 mins ago
இந்தியா
7 mins ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
சுற்றுச்சூழல்
2 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago