வடகொரியா - அமெரிக்கா பேச்சுவார்த்தையைத் தொடர வேண்டும்: சீனா வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

வடகொரியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சீனாவின் வெளியுறவுத் துறை பிரதிநிதி சாங் திங்கட்கிழமை கூறும்போது, ''முன்னேற்ற நடவடிக்கையைக் கருத்தில் கொண்டு அமெரிக்காவும் வடகொரியாவும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில்  ஈடுபட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். மேலும் இதன் மூலம் கொரிய தீபகற்பத்தில்  நிலவும் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்'' என்றார்.

வடகொரிய அதிபர் கிம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்து கொண்ட உச்சி மாநாடு வியட்நாம் தலைநகரம் ஹானோயில் கடந்த வாரம்  நடந்தது.

அணு ஆயுத சோதனை மையங்களையும் மூடிவிட வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் விருப்பமும், வடகொரியா மீது விதிக்கப்பட்ட அமெரிக்க வர்த்தகத் தடைகள் அனைத்தையும் ட்ரம்ப் நீக்க வேண்டும் என்ற வடகொரிய அதிபர் கிம்மின் விருப்பமும் நிறைவேற்றப்படாமல் இந்தச் சந்திப்பு தோல்வியில் முடிந்தது.

இந்தச் சந்திப்பில் எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை. ஆனால் இரு நாடுகளின் குழுக்களும் எதிர்காலத்தில் சந்திக்க எதிர்நோக்கியுள்ளன என்று இரு நாடுகளின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 mins ago

வணிகம்

24 mins ago

இந்தியா

26 mins ago

சினிமா

32 mins ago

ஓடிடி களம்

1 hour ago

கல்வி

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

மேலும்