இராக் மற்றும் சிரியாவிலிருந்து படைகளை அமெரிக்கா திரும்ப பெறக் கூடாது என்று குர்து கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து இராக்கில் உள்ள குர்து படைத் தலைவர் பர்சானி கூறும்போது, ”ஐஎஸ் இன்றும் இந்த பிராந்தியத்தில் அச்சுறுத்தல் தரும் இயக்கமாகத்தான் உள்ளது. மொசூல் போன்ற மற்றும் இராக்கின் வடக்குப் பகுதிகளில் இன்னும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே படைகளை அமெரிக்கா திரும்ப பெறக் கூடாது ” என்றார்.
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவான படையினர், ஐ.எஸ். பயங்கரவாதிகள் இடையே நடைபெற்று வரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன. இந்த உள்நாட்டுச் சண்டையில், குர்து இனப் போராளிகளுக்கு ஆதரவாக அமெரிக்காவின் 2,000 வீரர்கள் சண்டையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த மாதம், “ சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றுவிட்டோம். ஐஎஸ் தீவிரவாதிகளை தோற்கடிக்க அனுப்பப்பட்ட அமெரிக்கப் படை வெற்றி பெற்றுவிட்டது. ஆதலால், சிரியாவில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறும் “ எனத் தெரிவித்தார்.
மேலும் இராக்கிலிருந்து இனிவரும் காலங்களில் அமெரிக்க படைகள் வெளியேறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
வலைஞர் பக்கம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
இந்தியா
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
4 hours ago