சிரியா: அமெரிக்க வான்வழித் தாக்குதலில் 58 பேர் பலி

By ஐஏஎன்எஸ்

சிரியாவில் அமெரிக்கப் படைகள் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் 58 கொல்லப்பட்டதாக ஐ.நா. கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

சிரியா மற்றும் இராக்கில் ஆக்கிரமித்து வந்த ஐ.எஸ்-ஸுக்கு எதிரான வான்வழித் தாக்குதலை சிரியாவின் மேற்கு நகரமான அலீபோ எல்லையோரம் அமெரிக்கப் படைகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில், செவ்வாய்கிழமை நடத்திய தாக்குதலில் மட்டும் 58 பேர் கொல்லப்பட்டதாகவும், அதில் 50 பேர் கிளர்ச்சி அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று உறுதி செய்யப்பட்டதாகவும், மற்றவர்கள் பொதுமக்கள் என்றும், அங்கு இருக்கும் ஐ.நா. கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.

மேலும், சிரியாவில் வான்வழித் தாக்குதல் நடத்த இருப்பதாக அமெரிக்கா முன்பே எச்சரித்து இருந்ததாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி பொதுமக்களுள் 8 பேர் பலியானது வருத்தம் அளிப்பதாகவும் சிரியா அரசு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

11 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்