நேபாளத்தில் மலைப் பாதையில் வேன் தவறி விழுந்து விபத்து: 20 பேர் பலி

By செய்திப்பிரிவு

நேபாளத்தில் மலைப் பாதையில் சென்ற வேன் ஒன்று தவறி விழுந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து போலீஸார் தரப்பில், ”நேபாளத்தில் வெள்ளிக்கிழமையன்று  துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டவர்களை ஏற்றிக் கொண்டு வந்த வேன் கியான்பேடி பகுதியில் உள்ள மலை பாதையில் பாதை தடுமாறி, சுமார் 13,000 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே 20 பேர் பலியாகினர். 17 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.  இதுவரை 18 உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன” என்றனர்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாகவும் வேன் அதீத வேகத்தில் வந்ததே விபத்துக்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

நேபாளத்தில் மலைப் பாதையில் உள்ள மோசமான சாலைகளின் காரணமாக அங்கு விபத்து கடந்த சில வருடங்களில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

14 mins ago

சினிமா

19 mins ago

இந்தியா

40 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்