நேபாளத்தில் மலைப் பாதையில் சென்ற வேன் ஒன்று தவறி விழுந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து போலீஸார் தரப்பில், ”நேபாளத்தில் வெள்ளிக்கிழமையன்று துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டவர்களை ஏற்றிக் கொண்டு வந்த வேன் கியான்பேடி பகுதியில் உள்ள மலை பாதையில் பாதை தடுமாறி, சுமார் 13,000 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே 20 பேர் பலியாகினர். 17 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். இதுவரை 18 உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன” என்றனர்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாகவும் வேன் அதீத வேகத்தில் வந்ததே விபத்துக்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
நேபாளத்தில் மலைப் பாதையில் உள்ள மோசமான சாலைகளின் காரணமாக அங்கு விபத்து கடந்த சில வருடங்களில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சுற்றுலா
14 mins ago
சினிமா
19 mins ago
இந்தியா
40 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago