நேபாளத்தில் சிக்கித் தவித்த இந்தியர்கள் மீட்பு

By செய்திப்பிரிவு

நேபாளத்தில் சிக்கித் தவித்த 1,430 இந்தியர்களும் மீட்கப்பட்டு விட்டனர் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சீனாவின் திபெத்தில் உள்ள கைலாஷ் மானசரோவருக்கு புனித யாத்திரை சென்றனர். அவர்கள் நேபாளம் வழியாக யாத்திரை மேற்கொண்டனர். நேபாளத்தில் பலத்த மழை பெய்து வருவதால் விமானம், சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டு ஹில்சா, சிமிகோட் பகுதியில் 1,430 இந்திய பக்தர்கள் சிக்கிக் கொண்டனர்.

இதுதொடர்பாக நேபாளத்துக்கான இந்திய தூதரகம் ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், “நேபாளத்தில் சிக்கித் தவித்த 1,430 இந்தியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டனர். ஹில்சா, சிமிகோட் பகுதியில் சிக்கியிருந்தவர்கள் நேபாள்கஞ்ச், சுர்கட் ஆகிய பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

உலகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

வேலை வாய்ப்பு

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

கல்வி

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்