உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் நாடு திரும்பும் எண்ணம் இல்லை: முன்னாள் அதிபர் முஷாரப் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

தம்மை கைது செய்யும்படி நீதிமன்றம் மறைமுகமாக உத்தரவிட்டிருப்பதால், பாகிஸ்தானுக்கு திரும்பும் முடிவை கைவிட்டுள்ளதாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அதிபராக பர்வேஸ் முஷாரப் இருந்தபோது, அவசரநிலையை பிரகடனம் செய்தது, நீதிபதிகளை கைது செய்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. மேலும், பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் அவர் மீது பல தேசத் துரோக வழக்குகளும் தொடுக் கப்பட்டிருக்கின்றன.

இதனிடையே, 2016-ம் ஆண்டு முதல் லண்டனில் தங்கியிருக்கும் முஷாரப், அடுத்த மாதம் நடைபெறவுள்ள பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் போட்டியிட அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை அண்மை யில் விசாரித்த நீதிமன்றம், அவரை நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது.

இதன்பேரில், பாகிஸ்தான் திரும்புவதாக அறிவித்த முஷாரப், தன்னை கைது செய்ய தடைவிதிக்க வேண்டும் என நிபந்தனை விதித்தார். இதையடுத்து, முஷாரப் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கும் வரையில், அவரைக் கைது செய்யக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவானது, தம்மை கைது செய்யுமாறு மறைமுக மாக தெரிவிப்பதால், பாகிஸ் தான் திரும்பும் முடிவை தான் கைவிட்டிருப்பதாக வீடியோ மூலமாக முஷாரப் நேற்று அறிவித்தார். - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

தமிழகம்

24 mins ago

இந்தியா

59 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

23 mins ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்