சிரியாவில் இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்) ஆயுதக்குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் 426 பேருக்கு பொது இடத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஐ.நா. விசாரணைக் குழு தெரிவிக்கிறது. ஐ.நா. மனித உரிமை ஆணைய உத்தரவின் பேரில் சிரியாவில் மனித உரிமைகள் குறித்து சுயேச்சையான விசாரணைக் குழு ஆய்வு மேற்கொண்டது. இக்குழு அளித்துள்ள அறிக்கையில்,
“சிரியாவில் ஐ.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள ரக்கா மற்றும் அலெப்போ பகுதிகளில் பொது இடங்களில் மரண தண்டனை நிறைவேற்றுவது, உடல் உறுப்புகளை துண்டிப்பது, கசையடி கொடுப்பது, சிலுவையில் கட்டி வைத்து அவமானப்படுத்துவது போன்ற கொடூரங்கள் வெள்ளிக்கிழமை தோறும் தொடர்ந்து நடைபெறுகிறது. இதுவரை 426 பேருக்கு பொது இடத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்கள் அனைவருமே ஷியா முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சிறுபான்மை இனத்தவர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
சினிமா
4 hours ago
இந்தியா
5 hours ago
வணிகம்
13 hours ago
சுற்றுச்சூழல்
5 hours ago
சுற்றுலா
6 hours ago